tamilnadu

img

கோட்சே பிறந்த நாளை கொண்டாடிய இந்து மகா சபை

குவாலியர்:

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே-வின் பிறந்த நாளை, வழக்கம்போல இந்து மகா சபை அமைப்பு கொண்டாடியுள்ளது.


மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,இந்து மகா சபையின் துணைத்தலைவர் ஜைவீர் பரத்வாஜ், கோட்சேவின் படத்திற்கு ஆரத்தி வழிபாடு நடத்தியுள்ளார்.


மேலும், அப்போது, குவாலியர் அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப் பட்ட கோட்சே சிலையை, வரும் நவம்பர் மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கோட்சேவின் புதிய சிலையை நாங்கள் அமைப்போம் என்றும் ஜைவீர் பரத் வாஜ் கெடு விதித்துள்ளார்.


போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், அண்மையில் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியது பற்றியும், அவரின் கருத்தை பாஜகதலைமையே கண்டித்தது பற்றியும் கருத்து தெரிவித்துள்ள பரத்வாஜ், “பாஜகவின் தலைவர்கள் கோட்சேவை தேசபக்தராகவே கருதுகிறார்கள்; ஆனால், ஆளும் கட்சியாக இருப்பதால் அதனை வெளிக்காட்டிக்கொள்ள மறுக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

;